Saturday, August 28, 2010

மனிதம் + விதி = வாழ்க்கை ......நிறுவல் I

நிறுவல் 1
அறிமுகம் 
அவன்: (மனிதத்தின் பாகம்)
மூன்றடுக்கு மாடிவீடு 
முன்னுக்கு மூண்டு கார் 
நுனிநாக்கில் இங்கிலீசு 
தனியாக தங்குமிடம் 
இரவு விடுதி களியாட்டம் 
இல்லையெண்டால் Blind Dating
மூத்த சகோதரிக்கு   
முந்தநாள் விவாகரத்து,
இளைய சகோதரிக்கு
எந்தநாளும் விவாகரத்து

அவள் (மனிதத்தின் பாகம்) 
மூண்டுவேளை ஒருசோறு 
முதலுதவி எண்டாலும்
மூண்டு மைல் நடக்கவேணும் 
பாதி சம்பளம் மருந்தோட போயிடும் 
மீதி மிச்சமெல்லாம் எண்டைக்கும் கண்டதில்லை 
படிப்பில மட்டுமில்ல வேலையிலையும் 
கெட்டிக்காரி . தானும் தன்ர  வீடும் எண்டு 
நல்லாத்தான் இருந்தவளாம்  

விதி 
வடிவம் ஏதும் இன்றி எதிலும் வந்து குந்தும் 
மாயப் பிசாசு , இந்த சமன் பாடில் 
இது அந்த குரூப் ஸ்டடி. 

 செயன் முறை 
அந்த கோர்ஸ்  படிச்சா தான் 
நல்ல வேலை கிடைக்குமெண்டு அவளும் 
எதாவது படிச்சாக வேணுமெண்டு அவனும் 
ஒன்றாக ஒரே வகுப்பில் இளமை ததும்பும் 
கல்லூரிச் குடுவையில்  இடப்படுகின்றனர்.
ஆரம்ப தாக்கம் குறைவாக இருந்ததால் 
விதி தந்த ஊக்கி சோதனை செய்யப்பட்டது 

அவள் அவன் இருவரும் ஒரு குரூப்
அவள் அவன் இருவருக்கும் ஒரு அசைன்மென்ட்
அவனுக்கும் சேர்த்து அவளே படித்தாள்
அறிவின் மேற்பரப்பில் அன்பும் பகிர்ந்தது
அவர்களை தெரிந்தும் அவர்களே மறந்தனர்
அகவெப்ப தாக்கமாக காதல் மலர்ந்தது
உள்ளம் குளிர்ந்து ஆழம் உணர்ந்தது !
பதிவேதும் இன்றியே   உறவும் வளந்தது 

விளக்கம்
அவள் தலை முறையில் யாருமே
படி தாண்டியது இல்லை
அளவுக்கு மீறி எவரும்
குழி தோண்டியது இல்லை
வாழ்கை தேர் என்றுமே
குடம் சாய்ந்ததில்லை
பண்பாடு என்றுமே
மடம் போனதில்லை.

படிதாண்டல் குழி தோண்டல்
குடம் சாய்தல் மடம்போதல்
ஒன்றுமே புதிதல்ல அவனுக்கு என்றும்

உறவு வளர்ந்ததும் தாக்கம் முடிந்தது
தாக்கம் முடிந்ததும் யதார்த்தம் புரிந்தது

வாழ்க்கை வட்டங்கள் மேட் பொருந்தவே இல்லை

வாழ்ந்தாக வேண்டும் வருடம் முழுவதும்
வாழ்வின் வரைவிலக்கணத்தை
தனித்தனியாக எழுதிக்கொண்டனர்
இரு வேறு வாழ்க்கை வட்டங்கள்
இருவருக்கும் பொருந்திக் கொண்டன.
இதற்கும் விதி என பெயரிடப்பட்டது

முடிவு 
மனிதம்கள் விதியினால் கலக்கப் பட்டு
வாழ்க்கை அமைக்கப்படுகிறது .

நிறுவல் II  தொடரும் ...

சிகரன் (நட்பை படித்தபோது )
28 August 2010





Tuesday, August 24, 2010

மாற்றங்கள்

நினைவு தெரிந்த நாளில் இருந்து 
எனக்கு கிடைக்கப்பெற்ற 
ஆயிரமாயிரம் ஹாய்  களுக்குள் 
அன்று நீ சொன்ன அந்த அழகான ஹாய் 
இன்றும் இனிமையாக 
என்றும் பசுமையாக!

பிறந்து இன்று வரை பயணித்த 
ஆயிரமாயிரம் பேருந்துகளில் 
நீயும் நானும் பயணித்த 
அந்த தோலுரிந்த பேருந்தும் 
குடல் பிரிந்த இருக்கைகளும் 
இன்றும் இதமாக 
மனதுக்கு சுகமாக! 

சாதனை செய்வேன் என சாக்கு போக்கு சொல்லியே 
வீணடித்த வினாடிகள் கோடியாய் இருக்க 
கொஞ்ச நேரம் போனதற்கே 
கோபம் கொண்ட உன் மனதை 
தேற்ற நான் செய்த 
சாதனைகள் இன்றும் 
திடமான பதிவாக!

அந்த இதம் சுகம் 
இனிமை பசுமை
பதிவுகள் சாதனைகள் 
எல்லாம் 
சற்று முன் வரை எம்மோடு. 
ஆனால் நீ கூறிய பின்புதான் உணர்ந்துகொண்டேன் 
மாற்றங்கள் எப்போதும் மாறாதவை என்று !

இனி  ...!
.....................
........................
.........................
.........
....................!



சிகரனின் கற்பனையில் ..!


Monday, August 23, 2010

எத்தனை நடக்குமோ?

செத்து பிறந்த உம் மானமினி இங்கு
கத்தும் குரல் கேட்கும் - உன் சுகம்
வித்து பிழைத்த காட்டேரி இனி உன்
முத்தத்தை தினம் ஆளும்

பத்து வயதில் பார்த்த வதைகள் - நின்
புத்தியிலே வற்றிப் போகும்
சொத்து சுகமுடன் சொற்பனமாய் வாழ
சித்தம் துடிக்கும் சுகத்தை தேடும்

வத்தை வரம்பெல்லாம் சிங்களம் பேசும்
நித்தம் ஓர் துளியாக செந்தமிழ் சாகும்
கத்தை கத்தையா காணிகள் போகும்
பித்து பிடித்தங்கே நம் தாகம் அலையும்

குத்தகை சொத்தெல்லாம் பத்திரம் மாறும்
சித்திரத்தோடு நம் வரலாறும் மாறும்
பத்திரமாக செதுக்கிய சிலைகளில்
புத்த கொடியிங்கு வீரமாய் பறக்கும்

முத்தமிழ் குமரனின் காலாட்படையில் உன்
இரத்தம் குடித்தவன் சேனதிபதியாவன்
இத்தனை நடந்தது  எத்தனை நடக்குமோ?
மோட்சம் இன்றியே நம்முயிர் அழியுமோ?

சிகரன் மனதில் பட்டவை ..!
23 August 2010