Tuesday, August 24, 2010

மாற்றங்கள்

நினைவு தெரிந்த நாளில் இருந்து 
எனக்கு கிடைக்கப்பெற்ற 
ஆயிரமாயிரம் ஹாய்  களுக்குள் 
அன்று நீ சொன்ன அந்த அழகான ஹாய் 
இன்றும் இனிமையாக 
என்றும் பசுமையாக!

பிறந்து இன்று வரை பயணித்த 
ஆயிரமாயிரம் பேருந்துகளில் 
நீயும் நானும் பயணித்த 
அந்த தோலுரிந்த பேருந்தும் 
குடல் பிரிந்த இருக்கைகளும் 
இன்றும் இதமாக 
மனதுக்கு சுகமாக! 

சாதனை செய்வேன் என சாக்கு போக்கு சொல்லியே 
வீணடித்த வினாடிகள் கோடியாய் இருக்க 
கொஞ்ச நேரம் போனதற்கே 
கோபம் கொண்ட உன் மனதை 
தேற்ற நான் செய்த 
சாதனைகள் இன்றும் 
திடமான பதிவாக!

அந்த இதம் சுகம் 
இனிமை பசுமை
பதிவுகள் சாதனைகள் 
எல்லாம் 
சற்று முன் வரை எம்மோடு. 
ஆனால் நீ கூறிய பின்புதான் உணர்ந்துகொண்டேன் 
மாற்றங்கள் எப்போதும் மாறாதவை என்று !

இனி  ...!
.....................
........................
.........................
.........
....................!



சிகரனின் கற்பனையில் ..!


No comments:

Post a Comment