வெளிப்படுத்துகையில்,
உனதும் எனதும்
வெவ்வேறாயினும்
நமது உணர்வு
ஒன்று தான்
சிகரன்
020526
சிறிதாக கிறுக்கி கொண்டவை ...!
இதுவரை அவர்கள்
கண்டிராத ஓர்
புதிய பாதைக்கான
வரைபடம்.
பாதைகள் மாறலாம்
இலக்கு என்றும் மாறாது.
அடைய வேண்டுமா
இல்லையா என்பது
அவர்களின்
முடிவு
அவர்களுக்காக
சிகரன்
22 04 26
அவர்கள் எங்கே விழுந்தார்கள் என்பது முக்கியமல்ல,
நிழல்கள் எவ்வளவு நீளமாகப் படர்ந்தன என்பதும் பொருட்டல்ல;
ஒவ்வொரு ஆன்மாவும் தம்
மனதுக்கு பிடித்த புதிய பாடலைப் பாட,
இன்னொரு வாய்ப்பிற்கு தகுதியுடையவர்களே.
சிகரன்
28 04 26
பட்ட மரங்கூட
சிரித்துக் கொண்டது
கவிதைப் பூக்கள்
மலரக்கண்டு.
Translation ;
Even dying tree
Smiled when
the poems
bloomed.
......................................................
புத்தகமாய்
இருப்பதனால்
என்னவோ
எனக்கும்
கவிதை எழுத
தோன்றுகிறது..
Tranilation
I could write my scribbles
as a poem because
You are a book.
.............................................................
எனது
நூலகத்தின்
அனைத்து
புத்தகங்களிலிருந்த
கவிதைகளின்
தொகுப்பு
உனது
அரட்டைகள்.
.
The chat we had
is the combination
of all the poem I had
in my library
...............................................................
நாலுமணி நேர
தூக்கத்தை
அவசர அவசரமாக
மூன்றரை மணி நேரத்தில்
முடித்துக் கொண்டு
எழந்திருக்கிறேன்
உன் மீதிக்
கவிதைக்காக.
I finished my four hour sleep
in three and half hour
to catch up with your
Rest of the poem.
...............................................................................
அவ்வப்போது
கிறுக்கிக்கொள்ளும்
வரிகள் எல்லாம்
கவிதைகள் ஆகின
அவை
உன் காதில்
விழுந்த பின்னர்
My scribles become poem
When you listen to those.
...........................................................................
ஒரு சில
இதயங்களின்
வெளிப்பாடு
மறு சிலருக்கு
வியப்பு -
கவிதை
A poem is an expression of their hearts
But for some it is a surprise.
..........................................................................
ரகசியம் - அன்று
எனக்கு மட்டுமே
தெரிந்த கதை
இன்று
உனது மொழியில்
கவிதையாக.
The story that only known to me is there for you in the form of poem, for you
சிகரன்
வசந்த கால
கிறுக்கல்கள்.
05 05 26