சீருடை அணிந்த சிறுவனாய் பார்த்தேன்,
சிதறிய புன்னகை மட்டும் தான் அன்று தெரியும்!
உன தோல்ச்சிறு பையும்
பச்சை நிற பைக்கும்(bike)
மென்மையான குணமும்
கள்ளம் கபடமற்ற சுபாவமும்
காலம் முழுதும் என் மனதில் வந்து போவதுண்டு.
இன்று உன் நாளுக்கு நாள் நீ தரும் ஆச்சரியங்களுடன்
பல கலையும் கற்று நீ அடைந்திருக்கும் விஸ்வரூபம் கண்டு வியக்கிறேன்,
என் சகலகலா வல்லவனே!
சிகரன்
08 05 26
No comments:
Post a Comment