Sunday, September 26, 2010

ஒற்றுமை - வேற்றுமை

பிறந்த இடங்கள் 
படித்த பள்ளி
பொறுக்கிய பாடங்கள் 
செதுக்கிய பட்டங்கள் 
பிடித்த ஆடை 
பிடிக்காத கலாச்சாரம் 
தெரிந்த விடயங்கள் 
தெரியாத உண்மைகள் 
கண்ட கனவுகள் 
காணத நனவுகள் 
பழகிய கலைகள் 
பழக்கமில்லா பண்புகள் 
அனைத்தும் ஒன்றாக  இருந்தும்
நீயும் நானும் வேறாக
சிகரன் 



Saturday, September 11, 2010

கிளை தவறிய இலைகள்

செல் கொண்டு
செதுக்கிய
அற்புத சிலைகளில் 
நீயும் நானும் 
தத்ரூபமாக அமைந்திருந்தும் 
நான் வளர்த்த 
காதல் பெருமரத்தின் 
ஆனந்த கிளைகளில்  
தவறிய இலையாக  
இன்று 
நீ!


சிகரன் !
11 09 2010


Sunday, September 5, 2010

ஞாபகம்

சிறு வயதில் நியோர் சிகரமாய் நின்றது 
மறு படியும் என் மனதில் சரளமாய் வருகிறது
தட்டா தெருச் சந்தியிலிருந்து 
எட்டாத சைக்கிளில் நாமும் - கால் 
முட்டுகின்ற சைக்கிளில் நீயும் - நேரம் 
தட்டாமல் சந்தித்தோமே? 
ஞாபகம் வருகிறதா?
மொழி கொண்டு பேசவில்லை நாம் கண் 
விழி கொண்டு பேசினோம் 
கடைசி நாள் கல்விக்கூடத்தில் 
சற்றும் அறியாத பருவமதில் 
முற்றும் திறந்த முதியவரை 
முறையாக நான் மணப்பேன் என 
விரைவாகக் கூறினாயே !
ஞாபகம் வருகிறதா?
என்ன சொன்னாய், 
நாங்கள் எல்லாம் உனக்கு 
சின்ன பயல்கள் என்றா? 
எங்களை பார்த்தாயா இன்று?
காலம் தான் பதில் சொல்லும் 
பருவத்து வினாக்களுக்கு?
கடல் கடந்தும் உனக்கு 
மடல் எழுதுகின்றோம் 
எனக்கு என்னவோ எண்ணத் தோன்றுது
கடவுள் என்றோ நம் விதியை எழுதி விட்டான் என்று !
சிகரன் 


04 November 2008

எனக்கு பிடித்தது !

தோலின் நிறம் 
தாவும் பேச்சு 
தலை கோதும் விரல்கள் 
தடுமாறும் சொற்கள் 

சிரிக்கும் புருவம் 
சிறுகத் துளிர்த்த பருக்கள் 
சீறிடும் கோபம் 
சிந்திக்கும் வேகம் 

மனம் மயக்கும் பார்வை 
குணம் மிகுந்த சேர்க்கை 
கேட்கும் பொறுமை 
காக்கும் ஆர்வம்

இவையெல்லாம் 
நீ சொன்ன பின்பு தான் 
என்னையே 
எனக்கு பிடித்தது !

சிகரன் 


Saturday, September 4, 2010

நடைப்பிணம்

நாளை முதல் நான் ஒரு
நடைப்பிணம்

நாதியற்றவர்கள் கூட ஒரு கணம் நின்று
நலம் விசாரிக்க மாட்டார்கள்

நட்புகள் மட்டுமல்ல உறவுகள் கூட
நாயுண்ணி ஆவர்கள்

நம்பிக்கைக்கு கிடைக்கும்
நித்திய ஏமாற்றம்

நமட்டு சிரிப்புகள்
நாள் தோறும் கேட்கும்

நாளம் நரம்பெல்லாம்
நிர்கதியாகும்

நந்தவனங்கள்
நரகலோகமாகும்

நரபலித் தெய்வம்
நர்த்தனமாடும்

நேற்று கிடைத்த
நட்சான்றிதழில்

நனைந்து நமையும் என்
நல் நினைவெல்லாம்

நாயனம் இன்றியே
நாதம் இனி அடங்கும்

நாட்பட்ட உளகுமைச்சல்
நாற்றமெடுக்கும்

நிலையின்றி என் கதை
நிர்வாணமாகும்

நீவி விட்ட என் உறவு
நிலை மாறிப் போகும்

நினைவுக்குள்
நீந்தி
நடைபிணம் மாளும்.


நன்றியுடன் சிகரன்
நாட்டுக்காக!

04 Sep 2010