சிறு வயதில் நியோர் சிகரமாய் நின்றது
மறு படியும் என் மனதில் சரளமாய் வருகிறது
தட்டா தெருச் சந்தியிலிருந்து
எட்டாத சைக்கிளில் நாமும் - கால்
முட்டுகின்ற சைக்கிளில் நீயும் - நேரம்
தட்டாமல் சந்தித்தோமே?
ஞாபகம் வருகிறதா?
மொழி கொண்டு பேசவில்லை நாம் கண்
விழி கொண்டு பேசினோம்
கடைசி நாள் கல்விக்கூடத்தில்
சற்றும் அறியாத பருவமதில்
முற்றும் திறந்த முதியவரை
முறையாக நான் மணப்பேன் என
விரைவாகக் கூறினாயே !
ஞாபகம் வருகிறதா?
என்ன சொன்னாய்,
நாங்கள் எல்லாம் உனக்கு
சின்ன பயல்கள் என்றா?
எங்களை பார்த்தாயா இன்று?
காலம் தான் பதில் சொல்லும்
பருவத்து வினாக்களுக்கு?
கடல் கடந்தும் உனக்கு
மடல் எழுதுகின்றோம்
எனக்கு என்னவோ எண்ணத் தோன்றுது
கடவுள் என்றோ நம் விதியை எழுதி விட்டான் என்று !
சிகரன்
04 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment