நாளை முதல் நான் ஒரு
நடைப்பிணம்
நாதியற்றவர்கள் கூட ஒரு கணம் நின்று
நலம் விசாரிக்க மாட்டார்கள்
நட்புகள் மட்டுமல்ல உறவுகள் கூட
நாயுண்ணி ஆவர்கள்
நம்பிக்கைக்கு கிடைக்கும்
நித்திய ஏமாற்றம்
நமட்டு சிரிப்புகள்
நாள் தோறும் கேட்கும்
நாளம் நரம்பெல்லாம்
நிர்கதியாகும்
நந்தவனங்கள்
நரகலோகமாகும்
நரபலித் தெய்வம்
நர்த்தனமாடும்
நேற்று கிடைத்த
நட்சான்றிதழில்
நனைந்து நமையும் என்
நல் நினைவெல்லாம்
நாயனம் இன்றியே
நாதம் இனி அடங்கும்
நாட்பட்ட உளகுமைச்சல்
நாற்றமெடுக்கும்
நிலையின்றி என் கதை
நிர்வாணமாகும்
நீவி விட்ட என் உறவு
நிலை மாறிப் போகும்
நினைவுக்குள்
நீந்தி
நடைபிணம் மாளும்.
நன்றியுடன் சிகரன்
நாட்டுக்காக!
04 Sep 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment