தாவும் பேச்சு
தலை கோதும் விரல்கள்
தடுமாறும் சொற்கள்
சிரிக்கும் புருவம்
சிறுகத் துளிர்த்த பருக்கள்
சீறிடும் கோபம்
சிந்திக்கும் வேகம்
மனம் மயக்கும் பார்வை
குணம் மிகுந்த சேர்க்கை
கேட்கும் பொறுமை
காக்கும் ஆர்வம்
இவையெல்லாம்
நீ சொன்ன பின்பு தான்
என்னையே
எனக்கு பிடித்தது !
சிகரன்
No comments:
Post a Comment