சோதிடக் கிழவியொண்டு
பாதிவழி நடு நிறுத்தி
சேதியொன்று சொன்னது
முன்பொருநாள் இதே நாளில்
முன்றெழுத்து நட்பொன்று
நாளுக்கு கூடிவரும்
நாளும் உன் நினைவுடன்
நன்றாக சேர்ந்திருக்கும்
காணத உணர்வெல்லாம்
கரைசேரக் காண்பாய் நீ
கற்று கற்றே உன்
காலங்கள் போகும் என்றும்
கடைசி வரைக்கும்
காதலும்
காத்திருப்புகளும்
கனவாகவே இருக்கும் என்றும்
சொல்லி முடித்திருந்தாள்
சொற்பன கிழவி
சிவனையே நம்பவில்லை
சிறுகதையை நம்புவேனா?
சிவனும் கூட கிழவிக்கு சார்பு போல்
அவளுக்கும் கூட அதையே சொல்லி வைத்தான்
நடு சாமம் தாண்டி நல்லதாய் ஒரு கனவில்
நண்பனை கண்பித்தான்!
அர்த்த ராத்திரியில் நிகழ்ந்தது
ஆனந்த சந்திப்பு
அவர்கள் அறியாமலேயே
அடி பணிந்து போயினர்
அரங்கம் இல்லாமலேயே
அந்தரங்கங்கள் அரங்கேற்றப்பட
ஆனந்த தாண்டவம்
இருவரும் ஆடினர்
வரையறை தெரிந்தும்
வார்த்தை மீறினர்
கடமை உணர்ந்தும்
கட்டளை மீறினர்
காதலின் சுகத்தையும்
காத்திருப்புகளின் வலியையும்
அணு அணுவாக
அறிந்து கொண்டனர்
கற்றுத்தெரிந்தவற்றை
கனவாக்கி கொண்டனர்
காலம் முடிந்ததும்
நனவை உணர்ந்தனர்
கனவு எது ?
சோதிடக் கிழவியா
சொல்லிவைத்த சேதியா?
கற்பனை காதலா? காத்திருப்புக்களா?
காலத்தின் முடிவா?
இன்று மீண்டும்
அந்த கிழவி
என்வழி நிறுத்தி
மறு கதை கூற
என் கை பிடிக்கிறாள்
மீண்டும் அதே கதை!
ஆனால்
இது மட்டும் கனவு
சிகரன்
09 oct 2010
காலத்தின் முடிவா?
இன்று மீண்டும்
அந்த கிழவி
என்வழி நிறுத்தி
மறு கதை கூற
என் கை பிடிக்கிறாள்
மீண்டும் அதே கதை!
ஆனால்
இது மட்டும் கனவு
சிகரன்
09 oct 2010
No comments:
Post a Comment