அந்தத் தனக்கென்று நிறமில்லா முழுமதியைக் கடந்த பின்
மனிதனே அறிந்து கண்டான்.
ஆண்டாண்டு காலமாய் நிலவு வெள்ளையென்று நம்பிய அவன்,
அமாவாசையைக் கரிநாளென்று முழுமையாய் ஒதுக்கிவைத்து
பௌர்ணமியைக் கொண்டாடினான்.
தோலின் நிறம்கொண்டு தன் இனத்தைப் பிரித்து வைத்து,
கறுப்பழகி அவளை...
ஊசி முனையாய் சொற்களால் குத்தினான்.
பிஞ்சு வளர்பிறையில் உயிர் தழும்புகளை விட்டுச் சென்றான்.
நிறத்தின் பெயரால் நிழலில் தள்ளப்பட்டபோது,
அவளே அவளுக்கு அந்நியமானாள்.
சிறு மிட்டாயும், சிற்றோடை விளையாட்டும் தந்த -
சின்னஞ்சிறு சந்தோஷங்களைக்கூட,
"தகுதியற்றவள்" என்று அவளே விட்டுக்கொடுத்தாள்.
யாரோ வரைந்த அழகின் இலக்கணத்தில்,
தன் முகம் இல்லையென்று மூலையில் முடங்கினாள்.
தனிமையின் இருள் அவளை விழுங்கியபோது,
மௌனமே அவளுக்குச் சிறையானது.
இருளின் ரகசியம்
அழுத கண்கள் துடைக்கப்பட்ட ஒரு கணத்தில்,
உண்மையை உரக்க உணர்ந்தாள்.
இரவு கருமையாய் இருப்பதால்தான் -
பிரபஞ்சத்தின் கோடான கோடி விண்மீன்கள்
வெளிச்சமாய் தெரிகின்றன!
இருள் என்பது ஒளியின் இன்மை அல்ல,
அது ஒளியைத் தாங்கும் கருப்பை.
தன்னைத் தள்ளி வைத்தவர்கள் முன்னே,
தன்னம்பிக்கையை ஆடையாக உடுத்திக்கொண்டாள்.
மீண்டெழுந்த மனிதம்
கறுப்பு என்பது சுமையல்ல,
அது காலங்காலமாய் பூமி சுமக்கும் -
வளமான மண்ணின் நிறமென்று நிமிர்ந்தாள்.
அழகைத் தோலில் தேடியவர்கள் மத்தியில்,
அன்பையும் அறிவையும் தன் அடையாளமாக்கினாள்.
இன்று அவள் எரிகற்களின் காயங்களைச் சுமக்கும் பெண்ணல்ல,
காயங்களைச் செதுக்கிச் சிலையாக மாறிய பேருண்மை !
அவளுள் ஊற்றெடுக்கும் இந்த மகா மனிதம்,
வெறுப்பு விதைத்தவர்களையும் மன்னிக்கும்...
ஏனெனில், அவள் நிறத்தைப் போலவே -
அவள் இதயமும் இப்போது ஆழமானது, பேரழகானது.
News.; Recent lunar observations have revealed that the Moon's surface appears unexpectedly dark during close flybys due to the presence of ancient, carbon-rich materials and volcanic glass deposits
Sikaran
12 Apri 26





No comments:
Post a Comment