Tuesday, May 25, 2010

பிறந்த நாள் வாழ்த்துகள்!

உன் அளவு கடந்த அன்பை கோபம்
எனும் ஆற்றாமைக்குள் மூட்டை   கட்ட முயலும் 
உன் முரட்டு விதண்டா வாதங்களால் 
கூனி குறுகி சிதைந்து சீரழிந்த 
என் நிறைவேறா அபிலாஷைகளுக்குள்
நின் நினைவுகளுடன் வாடி வதங்கி
தனித்தே இயங்க கற்றுகொண்ட 
என் இதயம் -
மீண்டும் ஒரு தடவை 
உன் வர விருக்கும் பிறந்த நாளையும்  கூட
மறந்து விடும் என்பது தான்
எந்நாளும் உண்மை ! 
மனது மறக்காத கற்பனை  கோட்டைகளுக்கு
அத்திவாரம்  போட்ட
உன் கடந்து போன
பிறந்த நாட்களுடன்....
மீண்டும் ஒரு பிறந்தநாளுக்காய்
பெரிதாய் ஒரு கூட்டை கட்டிக் கொண்டிருக்கும்
கற்பனைக் காவியத்துக்கு
முன்கூட்டிய
பிறந்த நாள் வாழ்த்துகள்;
என் மனது மட்டும் கேட்க்கும்  படியாக...!
சிகரன்
22 May 2010



No comments:

Post a Comment