Thursday, May 27, 2010

கந்தர்வ காதல்

மன்மதக் காலை 
சொன்னது சேதி 
கந்தர்வ காதல் 
செய்தது மீதி


தந்தி தொடுத்தது 
ஏகாந்த நினைவு 
சிந்தித்  தெறித்தது
தேகாந்தமெங்கும் 


கோபதாபங்கள் 
இதம் கொண்டது 
விரக தாபங்கள் 
மதம் கொண்டது

மாற்றம் அறிந்தனம் 
சூளுரை கலைந்தனம் 
முற்றும் அறிந்தனம் 
முழுமையும் கண்டனம் 


மாற்றம்  புரிந்தனம் 
சூளுரை கொண்டனம் 
முற்றும் தெரிந்தனம் 
முழுமையை வெறுத்தனம்


கோபதாபங்கள் 
மதம் கொண்டது 
விரக தாபங்கள் 
இதம் கொண்டது  


இனி 


சிந்தி தெறிக்கும் 
ஏகாந்த நினைவை 
தேகாந்தமெங்கும்
தந்தி தொடுக்கும் 


மீண்டும் சேரும் மன்மதக் காலை 
மாண்டுபோகும் சீறிடும் ஊடல் 
செய்திகள் சொல்லும் 
கந்தர்வ காதலை !


சிகரன் 
27 May 2010 


( காதல் இங்கே மண்ணிற்கும் மனிதனுக்கும் )





No comments:

Post a Comment