Sunday, June 14, 2026

புரிதல்

தவறு என்னவென்று தெரியாமலே,

தண்டனைகளை நான் சுமக்கின்ற போது...

வலிகளோடு கலந்த இந்த காத்திருப்பு,

எமக்கொன்றும் புதிதல்ல!

​நகராத நொடிகள் வதைத்தாலும்,

மனமே, இதுவும் கடந்து போகும்!

மாறும் காலத்தின் சக்கரங்கள் சுழன்று,

நமக்கான நேரம் கை கூடும்.

​அன்று...

எம் உண்மையான உணர்வுகள்,

ஒரு தடவையேனும் உமக்கு புலப்படும் போது,

நீரே உணர்வீர்..

உம்மை நாம் எவ்வளவு ஆழமாய்

புரிந்து வைத்திருந்தோம் என்று!


சிகரன்

14 06 26

No comments:

Post a Comment