தவறு என்னவென்று தெரியாமலே,
தண்டனைகளை நான் சுமக்கின்ற போது...
வலிகளோடு கலந்த இந்த காத்திருப்பு,
எமக்கொன்றும் புதிதல்ல!
நகராத நொடிகள் வதைத்தாலும்,
மனமே, இதுவும் கடந்து போகும்!
மாறும் காலத்தின் சக்கரங்கள் சுழன்று,
நமக்கான நேரம் கை கூடும்.
அன்று...
எம் உண்மையான உணர்வுகள்,
ஒரு தடவையேனும் உமக்கு புலப்படும் போது,
நீரே உணர்வீர்..
உம்மை நாம் எவ்வளவு ஆழமாய்
புரிந்து வைத்திருந்தோம் என்று!
சிகரன்
14 06 26
No comments:
Post a Comment