நானும் நீயும் வருவதென்பது
தற்செயலாக நிகழ்கிறது!
வாழ்வின் பேரில் தீராத வெறுப்போ
சகஜ பேச்சுக்களில் அபிப்பிராய பேதங்களோ
நிஜ அழகையே அருவருக்கும்
அர்த்தமற்ற நினைப்புக்களோ
என்றைக்கேனும் நம்மிடத்தில்
இருந்திருக்குமா?
பின்னய காலங்களில்
அது ஏன் அப்படியாயிற்று?
நமது மொழி நமது போதாமைகளுக்குள்
எப்படி சுருங்கிப்போயிற்று?
நாமே நமக்கு விதித்த வரைமுறைகளுக்குள்
நம் உணர்வுகள் ஏன் விம்மி வெடித்தன?
மீறிவிடத் துடித்தன?
தற்செயலாக நாம் பொறுக்கிய பரிதாப வார்த்தைகள்
தவறிச் சிதறிய பளிங்காக மாறி
பல்வேறு திசைகளில் ஏன் அர்த்தம் கற்பித்தன?
நட்பை வேண்டியது நீயா? நானா?
நீ நாடினால் அது தேவை - அதுவே
நானாகிவிட்டால் நடிப்பு!
காதலிக்கத் தூண்டியது நீயா? நானா?
நீ பேசினால் ஜதார்த்தம் - அதுவே
நான் பேசினால் தப்பு!
நீ எனக்கு இன்னாரென்றும்
நான் உனக்கு இன்னாரென்றும்
நாம் தானே வகுத்துக்கொணடோம்!
அதற்குள் எதற்கு
அப்பா அம்மா தங்கச்சியெல்லாம்?
சாதி சனம் சந்ததியெல்லாம?
சீதணம் சொத்தெல்லாம்?
உன் முடிவுகள் எத்தனை தடவைகள் தான்
மாற்றியமைக்கப்பட்டன?
அழித்துத் திருத்தியே - நம்
உறவின் வரைவிலக்கணம் நம்மைக்
கிழித்துவிட்டதை நீ அறியாயா?
நாமிருவர் நட்பு பெற்றோம்
காதலித்து கூத்தடித்தோம்
கணவன் மனைவியாகி குழந்தையும் பெற்றோம்
வஞ்சமிலாப் பிஞ்சின் மழலை மொழியினிலே
எங்களை நாம் மறந்தோம்!
இதயத்து தழுவல்களால் நம்மை
இதமாக வைத்துக் கொண்டோம்!
நீடூழி வாழ்ந்தோமென
நாமும் நம் வரலாற்றை
பதித்துக்கொள்ள வேண்டாமா?
காலம் மீளாது மகனே(ளே)
காலன் வரும் நேரத்தை அவன்
தள்ளிப்போட மாட்டான்!
எனக்கு நீ! உனக்கு நான்!
நமக்கு நாம் - என
உணர மறுக்கும் விதிமுறைகளை
உடைத்தெறிந்து விடு!
காத்திருப்பென்பது விதியாகி
விட்டதனால் அந்த மதியின்
தண்மையினை "நம்" வீட்டு முற்றத்தில்
"நாமாக" அனுபவிக்கும் வரை…............
நான்
சிகரன்
(சில வரிச்சாயல்கள்
No comments:
Post a Comment