Wednesday, April 28, 2010

காதல்


கவிஞன் சொன்னான்
காதல் என்று - ஏனெனில்
ரசிக்க்த்தெரிந்தவன்!

கடவுள் சொன்னான்
அன்பு என்று- ஏனெனில்
ரட்சிக்கத்தெரிந்ததவன்!

நண்பன் சொன்னான்
ஆசை என்று- ஏனெனில்
மதிக்கத்தெரிந்தவன்!

மற்றவன் சொன்னான்
மோசம் என்று -ஏனெனில்
மதிப்பறியாதவன்!

தோற்றவன் சொன்னான்
கசக்கும் என்று -ஏனெனில்
அனுபவிக்க தெரியாதவன்!

வென்றவன் சொன்னான்
இனிக்கும் என்று -ஏனெனில்
அனுபவித்தவன் !

கண்டவன் சொன்னான்
காமம் என்று- ஏனெனில்
காத்திருந்தவன்

நீங்கள் சொல்கிறீர்கள்
'இல்லை இல்லை - அது
அவஸ்தை என்று' -ஏனெனில்
காதலிக்க தெரியாதவர்கள்!!
 
சிகரன் 

30 April 2008 

No comments:

Post a Comment