Saturday, April 24, 2010

உன் இதயத்தில் என்செங்குருதி !


புன்னகைக்க முனைந்தேன்
புரியவில்லை என்றாய்

மயோகார்டியமும் தாண்டினேன்
மயங்க மாட்டேன் என்றாய்

அறைகள் நான்கு தான்
இடத்தையும் வலத்தையும் பிரித்தே வைத்தாய்

விளையாட முனைந்தேன்
பப்பிலரி முனைகளால் அடித்தே கலைத்தாய்

குருதியாய் வந்தேன்
ஆட்டேரி தான் வழி என்றாய்

சுருக்கினாய் விரித்தாய்
என்னையே பிரித்தாய்


நீ அழியாதிருக்கத்தான்
உன்னுள் நுழைகிறேன்
என்னை கலைப்பதில்
உனக்கென்ன ஆர்வம்

பரபரப்பாய் குடி புகுந்தேன்
பாதியிலே திரும்பி வந்தேன்

பன்னீராறு தடவைகள்
பரிதவித்து போகிறேன்
பத்திரமாய் உன்னை
பாதுகாப்பதற்காக!

காத்திரு ! மீண்டும் நான் வருவேன் !

உன் லப் டப் சந்ந்தங்களை
நித்தம் சிந்திக்கும்
செங்குருதி!
19 October 2008
சிகரன் 

No comments:

Post a Comment