Wednesday, April 28, 2010

விடை கொடுக்கும்பொழுது


விடை கொடுக்கும்பொழுது
உன் முகத்தில் நிழல்கள் விழுவதில்லை
இன்னும் நம்பிக்கைக்கு
இடமுண்டாவென திரும்பிப் பார்க்கவே செய்கிறேன்!

விடை கொடுக்கும்பொழுது - உன் கண்கள்
எதையும் வெளிப்படுத்துவதில்லை
தூசிக்காவது இமைகள் மூடாதாவென
யாசிக்கவே செய்கிறேன் !

விடை கொடுக்கும்பொழுது - உன் கைகள்
உறுதியிழப்பதே இல்லை
உளைவெடுக்கவாவது நீளாதாவென்று
எதிர்பார்க்கவே செய்கிறேன்

இந்தமுறையும்
சரியாக சொல்லிக்கொள்ளவில்லையே என
வழியெல்லாம் நினைத்துக்கொண்டே
போகிறேன் .....
சிகரன் 
2005 
posted
26 June 2008 

No comments:

Post a Comment