skip to main |
skip to sidebar
விடை கொடுக்கும்பொழுது
விடை கொடுக்கும்பொழுது
உன் முகத்தில் நிழல்கள் விழுவதில்லை
இன்னும் நம்பிக்கைக்கு
இடமுண்டாவென திரும்பிப் பார்க்கவே செய்கிறேன்!
விடை கொடுக்கும்பொழுது - உன் கண்கள்
எதையும் வெளிப்படுத்துவதில்லை
தூசிக்காவது இமைகள் மூடாதாவென
யாசிக்கவே செய்கிறேன் !
விடை கொடுக்கும்பொழுது - உன் கைகள்
உறுதியிழப்பதே இல்லை
உளைவெடுக்கவாவது நீளாதாவென்று
எதிர்பார்க்கவே செய்கிறேன்
இந்தமுறையும்
சரியாக சொல்லிக்கொள்ளவில்லையே என
வழியெல்லாம் நினைத்துக்கொண்டே
போகிறேன் .....
சிகரன்
2005
posted
No comments:
Post a Comment