அது எப்போதும் மானசீகமாகவே இருந்தது
உனக்கு தெரிந்த பல எனக்கு தெரியாது
எனக்கு தெரிந்த பல உனக்கு தெரியாது
பார்த்தது பேசியது பழகியது
அனைத்தும் வினாடியிலும் சொற்பம்
அறியாப்பருவம் அரைகுறையாகவே
அந்தரங்கங்களை அறிந்து கொண்டது
மனசுக்கும் வயசுக்கும் நடந்த
போராட்டங்களுக்குள்
பழக வேண்டிய சந்தர்ப்பங்கள்
சிதறடிக்கப் பட்டன
பரமன் ஏற்ப்படுத்திய சந்தர்ப்பங்களால்
பிடிக்க வேண்டிய கரங்கள் பிரித்தெழுதப்பட்டன
உதவிய கரங்கள் உணரப்பட்டன
இன்று நானும் நீயும்
இன்னொரு சந்தர்ப்பத்தில்
ஒன்றாக
பிறிதொரு சந்தர்ப்பத்திற்காக
சிகரன்
உதவிய கரங்கள் உணரப்பட்டன
இன்று நானும் நீயும்
இன்னொரு சந்தர்ப்பத்தில்
ஒன்றாக
பிறிதொரு சந்தர்ப்பத்திற்காக
சிகரன்
13 April 2010
இந்த கவிதை ரொம்ப feel பண்ணி எழுதி இருக்கிறீங்க சிகரன் அண்ணா.
ReplyDelete